விஜய்சேதுபதி நடித்த “மாமனிதன்” படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வடிவேலு தானாம்.! ஏன் நடிக்கவில்லை தெரியுமா.? உண்மையை சொன்ன இயக்குனர்.

சினிமா உலகில் என்னதான் திறமையான நடிகர்களாக இருந்தாலும் இயக்குனர்களே அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் அந்த வகையில் விஜய் சேதுபதி சினிமாவில் ஒரு வாரத்தில் நடித்திருந்தாலும் இயக்குனர்கள் அவரது திறமையை கண்டறிந்து படிப்படியாக அவரை வளர்த்துவிட்ட அந்த வகையில் சீனுராமசாமி இயக்குனருக்கும் பங்குண்டு .விஜய் சேதுபதியை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து உள்ளவர் சீனுராமசாமி.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமனிதன் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சீனுராமசாமி இதுவரை விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களை கொடுத்துள்ளார்.

சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு இறுதி கட்ட படப்பிடிப்பை எடுத்தார்.  ஆனால் 2019ஆம் ஆண்டு முழுவதுமாக படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது அதன்பிறகு படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  வெளிவராமல் போனது. இந்த திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தை யுவன்சங்கர்ராஜா தயாரித்துள்ளார். சில பிரச்சினை காரணமாகவே இந்த திரைப்படம் இதுவரையிலும் வெளியாகாமல் இருக்கிறது ஆனால் வெகு விரைவிலேயே படத்தை வெளியிட யுவன் சங்கர் ராஜா முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி இந்த படத்தின் கதையை முதலில் விஜய்சேதுபதிக்கு அவர் சொல்லவில்லை மாறாக அவர் முதலில் சொன்னது வைகைப்புயல் வடிவேலுவின் தான்.

அப்போது படத்தின் கதையை கேட்டுவிட்டு சீனு ராமசாமி அவர்களை வாழ்த்தி விட்டு மேட்டர் ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு என கேட்டு விட்டு பின்வாங்கினார். பிறகு பிரபு தேவா கதையை கேட்டு கண் கலங்கினார் மம்முட்டி ஓகே சொன்னார் ஆனால் அது நடைபெறவே இல்லை. கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விரைவில் நல்ல செய்தியை சொல்லி மாமனிதன் படத்தில் நடித்தாராம்.

Leave a Comment

Exit mobile version