அஜித்தை தர குறைவாக பேசிய வடிவேலு.! காரணத்தை கண்டுபிடித்து விளாசும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்ரே சொல்லலாம் அந்த அளவிற்கு தற்போது சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக உறுதிப்படுத்த தகவலாக வெளியானாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்திற்கும் வடிவேலுவிர்க்கும் இடையே என்ன கருத்து வேறுபாடு காரணம் என்று சில தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 20 ஆண்டுகளாக ஏன் அஜித் தன்னுடைய படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கவில்லை என்பதற்கான காரணமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ராஜா திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஜோதிகா வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அஜித்தின் மாமாவாக நடிகர் வடிவேலு அவர்கள் நடித்திருப்பார். இந்த ரோலில் நடித்துக் கொண்டிருப்பது வடிவேலு அஜித்தை பார்த்து வாடா போடா என்று அழைத்திருப்பார்.

படத்திர்காகதானே என்று அஜித் அமைதியாக இருந்தார் ஆனால் சூட்டிங் முடிந்த பிறகு அஜித்தை மரியாதை இல்லாமல் வடிவேலு பேசியிருக்கிறாராம் இதனால் கோபமடைந்த அஜித் இயக்குனரிடம் நேரடியாக சென்று வடிவேலு இந்த மாதிரி கூறுகிறார் என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு ராஜா படத்தின் இயக்குனரும் அஜித் சொன்ன விஷயத்தை வடிவேலுவிடம் கூறியிருக்கிறார் அப்பவும் அஜித்தை வடிவேலு மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார் இதனால் கடுப்பான அஜித் ராஜா படத்துடன் முடித்துக் கொண்டு இனி வரும் படங்களில் வடிவேல் உடன் நடிக்க கூடது என்று முடிவெடுத்துள்ளார் இதனால் தான் அஜித் 20 ஆண்டுகளாக வடிவேலுவுடன் நடிக்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment