நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைபிரபலங்களுடன் சிரிச்சி பேசி புகைப்படம் எடுத்துக்கொண்ட வடிவேலு.! அந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா.?

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத காமெடி நடிகனாக வலம் வந்தாலும் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரது காமெடிகளை  சமூக வலைதள பக்கங்களில் பயன்படுத்தி வருவதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.

இவர் காமெடியில் பல அடிகள் உதவிகள் வாங்கினாலும் இவரது காமெடியில் அவ்வபோது பல கருத்துகளும் அமைந்திருந்தால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்த காமெடி நடிகர்களில் ஒருவராக இவரும் வலம் வருகிறார்.

மேலும் திரை உலகில் காமெடியாக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோ, பின்னணி பாடகர் போன்ற பல தன்மைகளை வளர்த்துக்கொண்டார்.

சமீப காலமாக படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வபொழுது நிகழ்ச்சிகளில் தலை காட்டி தன்னை வெளிகாட்டி கொண்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் மனோபாலா மற்றும் கங்கை அமரன் போன்ற பல பிரபலங்களுடன் இணைந்து வடிவேலு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு நீண்ட நாள்களுக்கு பிறகு வடிவேலு என குறிப்பிட்டார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version