வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது போல தனது வேலையைக் காட்டிய வடிவேலு.! உச்சகட்ட கோபத்தில் இருக்கும் சந்திரமுகி 2 பட குழுவினர்…

நடிகர் வடிவேலு அவர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்த நிலையில் பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. இந்த படத்தின் படபிடிப்பின் பொது நடிகர் வெடிவேலு மறுபடியும் தன்னுடைய வேலையை காட்டி உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் நீண்ட ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் கொஞ்சமாவது மாறி இருப்பார் என்று எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் எத்தனை முறை சொன்னாலும் புத்தி வராதது போல நடந்து கொள்கிறாராம் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நடிகர் வடிவேலு அவர்கள் சினிமாவில் பேரும் புகழும் கிடைத்த போது இவரை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு தலைகனத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பல வருடங்கலாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மறுபடியும் சினிமாவில் இறங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்தர்ந்து தனது மரியாதைக்கு ஏற்ப நடந்து கொள்வார் என்றால் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது போல தன்னுடைய ஆட்டத்தை மறுபடியும் ஆரம்பித்து விட்டாராம் வடிவேலு. அதாவது படக் குழுவினர் காலையில் 9:00 மணிக்கு ஷூட்டிங் என்று கூறினால் 10 மணிக்கு கண்டிப்பாக வந்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

ஆனால் பத்து மணிக்கு வராமல் 12 மணி வாக்கில் வந்திருக்கிறார் இதனால் அந்தப் படத்தில் பணி புரியும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் வடிவேலுக்காக பல மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வடிவேலு செய்த காரியத்தால் பட குழுவினர் வடிவேலு மீது செம்ம கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் நடிகர் வடிவேலு மீது ரசிகர்களும் கோபமாக இருப்பதாக கூறபடுகிறது.

Leave a Comment