மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.! சம்பளமே இத்தனை கோடிக்கு மேலையா.! ஷாக்கான சக நடிகர்கள்

தமிழ் சினிமாவில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான, ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் வடிவேலு. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவர் ஒரு பாடலையும் பாடியிருப்பார், அது  போடா போடா புண்ணாக்கு என்ற பாடல்தான், இந்தப் பாடல் அன்றைய காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

வடிவேலு அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராகவும் பாடியுள்ளார். அதன் பின்னர் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்ப்பட்ட சில பிரச்சனையால் வடிவேலு அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கூடாது என ரெட் கார்ட் தரப்பட்டது.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் என்னவென்றால் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

vadivelu

வடிவேலு மீது ஏற்ப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிந்துள்ள நிலையில்  மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகர் வடிவேலு. இவர் நடிக்க போகும் திரைப்படம் என்னவென்றால் நாய் சேகர் என்று திரைப்படம் என்று அவரே கூறியிருக்கிறார். இந்த பாடத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார்.

re-entry கொடுக்கப்போகும் நடிகர் வடிவேலுவுக்கு ரூ.10 கோடிக்கு மேல்  சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Exit mobile version