வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கிட்ட வைகை புயல் வடிவேலு.! இதலாம் உங்களுக்கு தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேல். சினிமாவில் பல காமெடி திரைப்படங்களில் நடித்துள்ளார் அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில் வடிவேலு நடித்தால் அந்த படம் ஹிட் என்கிற அளவிற்கு இருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் வடிவேலால்தான்  வெற்றி பெற்றது என கூறப்படுகிறது. மேலும் நடிகர் வடிவேலின் காமெடியை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் குவிய ஆரம்பித்தது.

இப்படி இருந்த நம்ப வடிவேலு மார்க்கெட்டை இழந்ததற்கு காரணம் என்ன என்று தெரியுமா. ஆம் ஒரு கட்சியில் பொதுக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சியை பார்த்து கூட அவர் அப்படி பேசவில்லை நடிகர் விஜயகாந்தை அவதூறாக பேசி ரசிகர்கள் மத்தியில் அவ பெயர் வாங்கிக் கொண்டார்.

நடிகர் விஜயகாந்த் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது. மேலும் நடிகர்கள் வடிவேலுக்கு ஆதரவாக இருந்த விஜயகாந்தை இப்படி பேசியதால் தான் மார்க்கெட் இழந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி சினிமாவை விட்டு ஒரு சில ஆண்டுகளாக விலகி இருந்தார். அதன் பின்னர் தற்போது திரும்பவும் சினிமாவில் நடித்து வருகிறார். என்னதான் வடிவேலு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தாலும் இழந்த மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை என்று பிரபல யூடியூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆனால் வடிவேலு மீது இன்னமும் விஜயகாந்தின் ரசிகர்கள் கோபமாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு தற்போது ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment