பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு.. துணை நடிகர்களின் பணத்தை பிடுங்கி பண்ணை வீட்டில் அட்டூழியம் செய்த வடிவேலு…

நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலுவின் லீலைகள் குறித்தும் அவருடைய பண்ணை வீட்டில் நடிகைகளை அழைத்துச் சென்று விடிய விடிய இருந்து விட்டு அதிகாலையில் அனுப்பி வைக்கும் பழக்கம் குறித்தும் பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு தன்னுடைய பாடி லாங்குவேஜ் ரசிகர்களை காமெடி மூலம் சிரிக்க வைப்பவர் நடிகர் வடிவேலு இவருடைய காமெடி பார்த்து சிரிக்காத நபர்களை இருக்க முடியாது அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வந்தார். மக்களை காமெடியில் சிரிக்க வைத்த வடிவேலுவின் உண்மை முகம் மிகவும் கோரத்தாண்டவமாக இருந்தது.

சமீப காலமாக பல பிரபலங்கள் வடிவேலு குறித்து மிகவும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பேட்டியிலும் வடிவேலு குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார் அதில் அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கும் பேட்டாவில் கமிஷன் எடுத்துக் கொண்டு அந்த பணத்தில் சரக்கு வாங்கி அடிக்கக் கூடியவர் வடிவேலு.

அப்படிதான் ஒரு இயக்குனர் அவர் கூட நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் வடிவேலு என்னை வேண்டாம் என ஒதுக்கி விட்டார் அதேபோல் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த நடிகை நடித்து விட்டால் அடுத்த படத்திற்கு வேறு ஒரு நடிகை பார்ப்பார். அவருக்கு ஈசி ஆரில் ஒரு பண்ணை வீடு இருக்கு அந்த பண்ணை வீட்டிற்கு நடிகைகளை அழைத்துச் சென்று விடுவார். மாலை ஆறு மணி ஆகிவிட்டாலே போதும் தன்னுடன் நடிக்கும் நடிகையை அழைத்துக் கொண்டு பண்ணை வீட்டுக்கு சென்று விடுவார்.

அந்த நடிகைகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வார் வடிவேலு மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணமே வராது மகா கஞ்சன் மற்றவர்களுக்கு உதவி செய்த விவேக், மயில்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் ஆனால் கல் மனசுக்காரன் கல்நெஞ்சக்காரன் இன்னும் இருக்கிறான் அவரை ஆண்டவன் நல்லா தான் வச்சிருக்கார் என பேட்டியில் மோசமாக பேசியுள்ளார்.