வாடிவாசல் இப்போது கிடையாது, நடிகர் சூர்யா அதிரடி முடிவு.! இதற்க்கு முக்கிய காரணமே வெற்றிமாறன்தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் சூரிய 42 வது படத்தில் நடிகர் சூர்யா கிட்டத்தட்ட 16 கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பச்சத்தில் உறுவாகும் திரைப்படமாக சூர்யா 42 திரைப்படம் உருவாக்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா 42 வது திரைப்படத்தை முடித்து விட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஆனால் நடிகர் சூர்யா வாடிவாசலை விட்டு விட்டு வேறொரு திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் தான் எனவும் கூறப்படுகிறது அதாவது வெற்றிமாறன் அவர்கள் தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. அதனால் தற்போது விடுதலை படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனால் வெற்றிமாறன் அவர்கள் முழுக்க முழுக்க விடுதலை படத்திற்காக நேரத்தை செலவு செய்து வருகிறார் அதனால் விடுதலை படம் வெளியான பிறகு தான் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறாராம் வெற்றி மாறன் என்று கூறப்படுகிறது.

இதனால் சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42வது படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கம் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த வருடம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காது எனவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதனை அடுத்து ஜெய் பீம் படத்தின் இயக்குனருடன் சூர்யா இணைய இருக்கிறார்.

Leave a Comment