“வடசென்னை” படத்தை தனுஷ் இல்லாமல் கூட எடுத்திருக்க முடியும் – வெற்றிமாறன் சொன்ன திடுக்கிடும் தகவல்.!

சினிமா உலகில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக சிறப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத பிரபலமாக வலம் வருபவர் வெற்றிமாறன் இவர் படங்களை ஒருபக்கம் தயாரிப்பதுமாக இருந்தாலும் மறுபக்கம் சிறப்பான படங்களை இயக்கி விருதுகளை அள்ளி வருகிறார்.

குறிப்பாக தேசிய விருது பெற்ற இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் வெற்றிமாறன். இவர் தனுசுடன் கைகோர்த்து இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் படங்களாக மாறி உள்ளன அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் அமைந்தன இந்த படங்கள் எப்படி சிறப்பாக இருந்ததோ அதே அளவிற்கு விருதுகளையும் தட்டிச் சென்றது.

இவர்களது கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் இப்பொழுது வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து முதல் முறையாக நடிகர் சூர்யாவுடன் கை கோர்க்க வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இதனால் தனுஷும், வெற்றிமாறனும் இணைவது சற்று லேட் ஆகும் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படம்.

தனுஷ் இல்லை என்றாலும் அந்த படம் எடுக்கப் பட்டிருக்கும் என கூறியிருந்தார் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் வடசென்னை படத்தை சிம்புவுக்காக தான் எழுதி இருந்தார் வெற்றிமாறன் ஆனால் சிம்பு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் அந்த வாய்ப்பு தனுசுக்கு போனதாக கூறப்படுகிறது.

Leave a Comment