வீதி உள்ளே நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும்… வாணி போஜன் வெளியிட்ட புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

சின்னத்திரை நயன்தாராவாக சின்னத் திரையில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆஹா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என பல சீரியல்களில் நடித்து தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய அழகையும், நடிப்பையும் பார்த்து வந்த இவருடைய ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என அழைக்கின்றனர். இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் தெய்வமகள் சீரியலில் மூலம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடியது இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் ஒரு இரவு, அதிகாரம் எழுதும்போது,ஓ மை கடவுளே என இன்னும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை எந்த ஒரு படமும் தரவில்லை. எனவே வாணிபூஜன் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஹாட்டான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அம்மணி தற்போது தனது பழைய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு சூடேற்றி வருகிறார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment