காதல் என்ற பெயரில் பிரபல நடிகரை நம்பி ஏமாந்துபோன வால்மீகி பட நடிகை..!

vaalmigi movie actress latest news: தமிழ் சினிமாவில் மலையாள நடிகைக்கு எப்போதுமே தனி மவுசு தான். அந்த வகையில் நயன்தாராவை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஏனெனில் நயன்தாரா  மலையாள நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

என்னதான் ரசிகர்கள் மலயாள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் ஒரு சிலரை ஒதுக்கி வைத்து தான் பார்த்தார்கள் அந்த வகையில் ரசிகர் மனதில் பிடிக்காமல் போன நடிகை தான் மீரா நந்தன்.

இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக வால்மீகி என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆதியுடன் அய்யனார் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

என்னதான் இவர் தமிழில் தன்னுடைய நடிப்பை வெளிகாட்டி இருந்தாலும் ரசிகர்களுக்கு அவை ஏற்றவண்ணம் கிடையாது ஆகையால் தமிழ் சினிமாப் பக்கம் தலை காட்டாமல் மீண்டும் மலையாள சினிமாவில் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

அதன்பிறகு 2015ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் நடிகையாக நடித்த நமது அம்மணி சுவற்றில் அடித்த ஸ்டெம்பர் பால் போல வந்த வேகத்திற்கு சினிமாவை விட்டு ஓடிவிட்டார்.

அதன்பிறகு சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என பல வருடமாக எந்த ஒரு திரையிலும் முகம் காட்டாமல் இருந்து வந்தார் அதற்கு முக்கிய காரணமே பிரபல நடிகரின் காதல் வலையில் விழுந்து பின்னர் கழட்டிவிடபட்டது தான் காரணம்.

இதனால் மனம் நொந்து போன நமது நடிகை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அவரை ஏமாற்றிய நடிகர் யார் என்ற செய்தி மட்டும் இன்னும் வெளிவரவில்லை.

meera-nandan
meera-nandan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment