நீ அப்பனா இல்ல மாமாவா டா..! சூர்யா பட நடிகரை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.!

Unnai Ninaithu : 2002 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய், பல்லவி, சத்திய பிரியா, பாலு ஆனந்த், ராம்ஜி, சார்லி, சித்ரா லக்ஷ்மணன், ஆர் சுந்தர்ராஜன் மயில்சாமி, பாண்டு, சிங்கமுத்து என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் உன்னை நினைத்து இந்த திரைப்படம் வெளியாகி சூர்யாவின் திரை பயணத்தை திருப்பி போட்ட திரைப்படமாக மாறியது.

ஏனென்றால் உன்னை நினைத்து திரைப்படம் சூர்யாவின் திரை பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் தலைவாசல் விஜய்க்கு ஒரு மகள் இருப்பது போலவும் ஆரம்ப காலகட்டத்தில் சூர்யா தான் லைலாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவார். அப்பொழுது சூர்யாவை மாப்பிள்ளை என தலைவாசல் விஜய் அழைப்பார்.

இடைப்பட்ட காலத்தில் வேறு ஒருவர் லைலா வாழ்க்கையில் வருவதால் தலைவாசல் விஜய் சூர்யாவை தூக்கி எறிவது போல் நடந்து கொள்வார் இதனால் மணமடைந்த சூர்யா விலகிவிடுவார். பிறகு சூர்யாவின் வாழ்க்கையில் சினேகா வருவார் ஆனால் செய்த தவறை அனைத்தையும் உணர்ந்து லைலா மீண்டும் சூர்யாவை தேடி வருவார் அப்பொழுது சூர்யா சினேகாவை காதலித்துக் கொண்டிருப்பார்.

நீ செஞ்ச அதே தப்பை நானும் செய்ய முடியாது என லைலாவிற்கு சூர்யா பதில் அளிப்பார் இதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன பொழுது தலைவாசல் விஜய் அவர்களை நீ அப்பனா இல்ல மாமாவா என கேவலமாக பேசி உள்ளார்களாம் அதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது உன்னை நினைத்து திரைப்படத்தின் கதை ஒரு அப்பனாக தன்னுடைய மகள் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பார் ஆனால் எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை பற்றி விசாரிக்காமல் செய்யும் தவறை தான் கதையாக கூறினோம் ஆனால் இதற்கு எனக்கு தீட்டு விழுந்தது என தலைவாசல் விஜய் பேட்டியில் கூறியுள்ளார்.