பிக்பாஸ் வீட்டில் கணவரை பற்றி பேசதால் கேள்வி கேட்டு குடையும் ரசிகர்கள் – பிரியங்கா சொன்ன பதில் என்ன தெரியுமா.?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர். இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக பணிபுரிந்தார் அதனை அடுத்து இவரது பேச்சு திறமை காரணமாக ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் நிகழ்ச்சியும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பல ரசிகர்கள் பிரியங்காவிற்காக மட்டுமே பார்ப்பார்கள்.

அந்த அளவிற்கு செம்ம காமெடி நிறைந்த நிகழ்ச்சியாகும். மேலும் இவர் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் போதே மக்கள் பலரிடம் பிரபலமடைந்தவர். இவர் அண்மையில்  நிறைவுபெற்ற பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஆவார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது என்டர்டைன்மென்ட் மக்கள் பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் படி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு பிரியங்கா அவரது நண்பர்கள் சிலருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

அந்த வகையில் அவரது யூடியூப் சேனலில் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒருவர் அவரிடம்  பிக் பாஸ் வீட்டில் உங்கள் கணவரைப் பற்றி ஒரு தடவை கூட பேசவில்லை ஏன் என கேட்டுள்ளனர். அதற்கு பிரியங்கா பர்சனல் கேள்விகள் நிறைய கேட்கப்படுகிறது அதிலும் குறிப்பாக பிரவீன் பற்றி பலரும் கேட்கின்றனர் அதற்கான பதிலை கண்டிப்பாக நான் வேறு ஒரு லைவ்வில் வரும் போது பதில் கூறுகிறேன் எனவும் சொல்லியுள்ளார்.

Leave a Comment