உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.? வெளிவந்த தகவல்..

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழ் திரைவுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்தவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து காமெடி கலாட்டா நிறைந்த படங்களில் நடித்து வந்த உதயநிதி பிறகு தொடர்ந்து திரில்லர் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது கண்ணை நம்பாதே என்ற திரில்லர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த படத்தினை மு.ராமன் இயக்கியிருந்த நிலையில் இதற்கு முன்பு உதயநிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர்களுடைய இரண்டாவது முறையான கூட்டணியில் கண்ணை நம்பாதே படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆத்மிகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஜோடியாக நடித்த இவர்களை தொடர்ந்து பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிக்கா, வசுந்தரா, சதீஷ், சுபிக்ஷா, பழ கருப்பையா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்தி வருவதனால் விரைவில் இவர் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், வடிவேல் ஆகியோர்களின் கூட்டணியில் உதயநிதி நடித்து வரும் ‘மா மன்னன்’ படம் தான் இவருடைய கடைசி படம் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று கண்ணை நம்பாதே படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் 2.15 கோடியும் உலக அளவில் மற்ற இடங்களில் 35 லட்சம் ரூபாயும் வசூல் செய்து இருக்கிறதாம். இதனை தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்துவரும் தற்பொழுது விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என படக் குழுவினர்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

Leave a Comment