தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சையை சந்தித்த இன்ப நிதி.! முதன் முறையாக பதிலடி கொடுத்த உதயநிதி..

சினிமா, அரசியல் என இரண்டிலும் மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ஆதவன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார் மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி இவருடைய முதல் திரைப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தந்தது.

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் நடிப்பில் கடைசியாக நெஞ்சுக்கு நீதி என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இன்பநதி என்ற மகனும், தமன்யா என்ற மகளும் உள்ளனர்.

இறுதியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அந்த தொகுதியில் பல நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் உதயநிதிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது எனவே முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் மொத்தமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த உள்ளார் அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் தான் இவருடைய கடைசி படம் எனக் கூறப்படுகிறது.

அவரது மகன் ஸ்போர்ட்ஸ்சில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அவர் ஒரு கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெரோகா எஃப்சி என்ற கால்பந்து அணிக்கு தமிழகத்தில் இருந்து உதயநிதியின் மகன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநதி பற்றி ஏராளமான சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

அதாவது இன்ப நிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது எனவே இதனை பார்த்த பலரும் கேலி செய்து வந்த நிலையில் பிறகு அரசியல்வாதி மகன் என்றால் தோழி இருக்கக் கூடாதா என  இன்ப நிதிக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட உதயநிதியிடம் மகனின் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த உதயநிதி அவருக்கு 18 வயது ஆகிவிட்டது அவர் இப்போது ஒரு அடல்ட் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பெற்றோராக எனக்கும் என்னுடைய மனைவிக்கும் என் மகனுக்கும் இருக்கும் விஷயத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த குடும்பத்திலும் இப்படி ஒரு அரசியல் பின்னணியில் இருப்பதனால் இது மாதிரியான குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும் அதை கையாள்வதற்கு முதிர்ச்சி இருந்தால் அவர் அதை சமாளிக்க வேண்டும் இருப்பினும் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடைய எல்லைக்கு மேல் நானே அதில் தலையிட விரும்பவில்லை அது அவருக்கான சுதந்திரம் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.

Leave a Comment