கொரோனா நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உணவு வழங்கிய டிவி நடிகை சரண்யா.!

தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் பரவி வருவதால் அனைத்து மக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் பல கோடி மக்கள் தொடர்ந்து உயிர் இழந்து வருவதால் அடுத்த நாள் உயிருடன் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற சந்தேகத்துடன் இருந்து வருகிறோம்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருவதால் சமைக்கவும் முடியாமல் தேவையான அத்தியாவசிய பொருள் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

எனவே பலர் உணவுகளை தயாரித்து நியாயமான விலையில் அப்படிப்பட்டவர்களுக்கு உணவுகளை அளித்து வருகிறார்கள்.  அதோடு மட்டுமல்லாமல் பல திரைப்பிரபலங்கள் அவர்களுக்கு உதவி செய்யும் சேவை மனப்பான்மையில் உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்கள்.

அந்தவகையில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி இதன் மூலம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை சரண்யா துரடி. இந்நிலையில் இவர் தான் தற்பொழுது உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் உணவு வழங்கி வருகிறார்.

saranya duraty 1
saranya duraty 1

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவை இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்துக் கொண்டு உணவு பொருட்களை அனைவருக்கும் வழங்குகிறேன்.இரண்டு முகக்கவசம் அணிந்து கொண்டும் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டங்களில் நிகழும் மரணச்செய்தி கலக்கத்தை  கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

saranya duraty
saranya duraty

இவ்வாறு இவரின் சேவை மனப்பான்மையை ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Comment