“பாய்ஸ்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது திரிஷாவா.? ஏன் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது தெரியுமா.. வெளிவரும் உண்மை தகவல்.

சினிமா உலகில் வெற்றிகண்ட இயக்குனர்கள் ஒருகட்டத்தில் நடிகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை இயக்க முன்பு வருவது வழக்கம்.

அப்படி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் போட்ட படத்தின் பட்ஜெட்டை விட லாபம் பார்த்ததாக என்றால் கேள்விக்குறிதான் அதை கையாளும் திறமை இல்லாதவர்கள் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் மாபெரும் தோல்வியை உருவாக்கிக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் ஒருவர் மட்டும் சமீப வருடங்களாக டாப் நடிகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கிய வெற்றி கண்டதால் இந்திய அளவில் தற்போது அறியப்படும் இயக்குனராக வலம் வருகிறார் அவரே இயக்குனர் ஷங்கர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்ற திரைப்படங்கள் ஆகவே இருந்து வருகின்றன.

அதுபோல ஒரு வெற்றி திரைப்படத்தை தான் 2003 ஆம் ஆண்டு  திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

“பாய்ஸ்” திரைப்படம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற அதிக  நாட்கள் ஓடியது.

ஆனால் இந்த திரைப்படத்தின் கதை அம்சம் சிறப்பாக இருந்ததால் தான் ஓடியது ஏனென்றால் இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறை நடிகர்கள் ஆகவே அப்போது காலகட்டத்தில் இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு அபாரமாக இருந்தது மேலும் இது அவருக்கு தமிழில் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா நடித்த ஹரிணி கதாபாத்திரத்திற்கு அவ்வளவு எளிதாக நடிகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

genelia
genelia

முதன்முதலில் இந்த கதாபாத்திரத்திற்காக திரிஷாவின் புகைப்படத்தை உதவி இயக்குனர்கள் காட்டி உள்ளார். ஆனால் அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு வேறு ஒரு நடிகையை தேட சொல்லி உள்ளார் ஷங்கர்.

உதவி இயக்குனர் இந்தத் திரைப்படத்திற்காக நடிகையை தேடும் பணியில் மும்முரமாக இருந்தனர் அப்போது மிஸ் இந்தியா என்ற நிகழ்ச்சி நடந்தது அதில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்ற நடிகைக்கு மகுடம் சூட்ட திரிஷாவை அழைத்திருந்தனர்.

அப்போது அவரைப் பார்த்த போது தேவதை போல் இருந்தார். உடனே  திரிஷாவை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து இயக்குனர்  சங்கரிடம் கொடுத்தோம் ஆனால் அவரோ..

trisha

இவரிடம் ஏதோ ஒன்று குறைகிறது வேறு ஒருவரை தேடுங்கள் என சொன்னார். அதனால் நாங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment