காதலால் மீண்டும் ஒன்று சேரும் திரிஷா சிம்பு..! விரைவில் காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட காதல் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் வலைத்து போட்டவர் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் பாடல்களும் செம ஹிட் அடிப்பது வழக்கம் அந்த வகையில் இவர் பல கதாநாயகிகளுடன் ஜோடி போட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திரிஷா மற்றும் சிம்பு ஆகிய இருவரின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக இவர்கள் இருவருமே பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்கள்.

இவ்வாறு முதல் பாகத்தை இன்னும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது அடுத்த பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயக்குனர் கௌதம் மேனன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் காதல் ஜோடிகளாக சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைய உள்ளதாக வெளிவந்த தகவலின் படி ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருவது மட்டுமில்லாமல் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் மட்டும் கண்டிப்பாக வெளிவந்தால் சிம்புவின் மார்க்கெட் உச்சத்துக்கு செல்வது மட்டுமில்லாமல் திரிஷா மறுபடியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆக மொத்தம் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஏகா போக பிரபலமாகிவிட்டார் இந்நிலையில் மற்றொரு நிராகரி திரைப்படம் என்றால் அவர் இனிமேல் நயன்தாரா இடத்தில் தான் இருப்பார் என்பது நிச்சயம்.

Leave a Comment

Exit mobile version