17 வருடமாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த த்ரிஷா.! 21 வருட சினிமா வாழ்க்கையில் மீண்டும் இணையும் தருணம்..

Trisha : நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கிட்டத்தட்ட 21 வருடங்களாக முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல் திரிஷா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் கடைசியாக நடிகை திரிஷா விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் கமலஹாசன் மணிரத்தினம் இணையும் புதிய திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் திரிஷாவுடன் ரேப் சீன் இல்லை என்று மோசமாக விமர்சித்து இருந்தார் இதனை கண்டித்து த்ரிஷா ஒரு பதிவை வெளியிட அதற்கு பல நட்சத்திரங்கள் திரிஷாவுக்கு ஆதரவாக பேசி வந்தார்கள்.

அந்த வகையில் தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவர்களும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் போலீசார் விசாரணை நடத்தியதில் மன்சூர் அலிகான் திரிஷாவை எதிர்த்து புகார் அளித்தார் ஆனால் மன்சூர் அலிகான் பேசிய பேச்சுக்கு திரிஷா தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.

பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகம் கூட கிடையாது என உச்சநீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு கருத்து தெரிவித்திருந்தார்கள் இந்த நிலையில் நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக பேசிய சிரஞ்சீவி விஷ்வம்பா  என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

திரிஷா சினிமாவுக்கு வந்து 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் 17 வருடங்களாக சிரஞ்சீவிக்கு  ஜோடியாக நடிக்காமல் இருந்து வந்தார் கடைசியாக 2006 ஆம் ஆண்டு ஸ்டாலின் என்ற திரைப்படத்தில் சிரஞ்சியுடன் நடித்திருந்தார் கிட்டத்தட்ட 17 வருடங்களாக இருவரும் ஒன்றாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.