பிரமாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அஞ்சலி – விட்ட இடத்தை பிடிக்க இதுதான் சரியான சாய்ஸ்.!

தமிழில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர் அதனாலேயே இவரை செல்லமாக ரசிகர்கள் பலரும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என சொல்லுவது வழக்கம் தமிழில் அர்ஜுன், ரஜினி, விஜய், கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்திருந்தாலும் இந்தியன் 2 அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அடுத்து உடனடியாக ஹிந்தி மற்றும் தெலுங்கு பக்கம் தனது திசையை திருப்பினார் முதலாவதாக ராம் சரணுக்கு ஒரு கதையை சொல்லி கமிட்டாகி படத்தை எடுத்து வருகிறார்.

அந்த படத்திற்கு தற்போது ராம் சரண்  15 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

படத்தை விறுவிறுப்பாக எடுத்து முடித்துவிட்டு நல்லதொரு பெயரையே தலைப்பாக வைக்க முனைப்பு காட்டி உள்ளது படக்குழு இந்த படத்தில் ராம்சரணுடன் கைகோர்த்து ஜெயராஜ், கியாரா அத்வானி, சுனில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட படங்களை எடுத்து வெற்றி கண்டு வரும் தில் ராஜு என்பவர் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த படத்தில் ராம்சரண் என்னுடன் கைகோர்த்து தற்போது நடிகை அஞ்சலியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது சொல்லப்போனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த படம் நல்லதொரு வரவேற்பை பெறும் பட்சத்தில் நடிகை அஞ்சலிக்கு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்லதொரு மார்க்கெட்டை பிடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment