பிரசாந்தின் “அந்தகன்” திரைப்படத்திற்காக களத்தில் குதிக்கும் டாப் இரண்டு நடிகர்கள்.! எல்லாம் இவனுக்காக தான்.

சினிமா உலகில் பல படம் ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் கூட ஒரு காலகட்டத்தில் தொடர் சறுக்கலை சந்தித்து சினிமாவில் தலை காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவது வழக்கம்.

அதில் இருந்து மீட்டு வர நடிகர்-நடிகைகள் தனது முழு திறமையை வெளிப்படுத்தி அந்த இடத்தை மீண்டும் பிடிக்க பல வருடங்களாகிறது அந்த வகையில் எப்படியாவது மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்க போராடி வருகிறார் நடிகர் பிரசாந்த்.

இவர் தமிழில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறாததால் தற்போது தெலுங்கு கன்னட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

அது அவரை முன்னெடுத்து காட்டவில்லை என்பதால் தற்போது வெற்றிபெற்ற ரீமேக் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘அந்தகன்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரசாந்துக்கு இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்து உள்ளதால் இத்திரைப்படம் இவருக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை தமிழில் முதன்முதலில் இயக்க இருந்தது மோகன்ராஜ் அதன்பின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை தூக்கி விட்டு பொன்மகள்வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பெடரி என்பவருக்கு ஒப்பந்தம் கொடுத்தது.

தற்பொழுது அவரும் ஏதோ ஒரு காரணத்தினால் விலக நானே எனது மகனை வைத்து இந்தப் படத்தை எடுத்துக் காட்டுகிறேன் என சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன்.

ஆனால் இதுவரை தியாகராஜன் காதல் மற்றும் ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு புதியதாக இருக்கும் என்பது அவருக்கு கூடுதல் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து சமுத்திரகனி முதல்முறையாக நடிக்க உள்ளதால் இவருக்கான கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தனக்கு தெரிந்ததை தேவையானவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார் எனவும் பார்க்கப்படுகிறது.

சமுத்திரகனியும் இதுவரை திரில்லர் சம்பந்தப்பட்ட படங்களில் இதுவரை நடித்தது இல்லை இதுவும் அவருக்கு ஒரு சவாலான படமாக அமையும் என கருதப்படுகிறது.

samuthirakani
samuthirakani

Leave a Comment