அஜித்தின் “வாலி” பட கதையை கேட்டு சிம்ரன், ஜோதிகா கதாபாத்திரம் சரியில்லை என்று கூறி விலகிய டாப் நடிகை.! இதுக்கு தான் ரொம்ப ஆட கூடாது.

தமிழ் திரைஉலகில் ஆரம்ப காலகட்டத்தில் பல இளம் தலைமுறை இயக்குனர்களை வளர்த்து விட்டவர் நடிகர் அஜீத் அப்படித்தான் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே . சூர்யாவை சினிமாவுலகில் வளர்த்து விட்டார். எஸ் ஜே சூர்யா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து அஜித் வாலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

இதனால் அஜித்தும் இயக்குனரும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார் அது போலவே தான் இந்த திரைப்படத்தில் இந்தத் திரைப்படத்தில் நடித்த சிம்ரனும் ஜோதிகாவும் நல்ல வரவேற்பு கிடைத்தது அதிலும் குறிப்பாக சிம்ரன் நடிப்பு  மிக சிறப்பாக இருந்தால் மக்கள் மத்தியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஆனால் இந்த  படம் சிம்ரனுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லையாம் இயக்குனர் எஸ் ஜே சூர்யா முதலில் இந்த கதாபாத்திரத்திற்காக ஹிந்தி பட நடிகை கிரண் என்பவரை கமிட் செய்ய இருந்தார் ஆனால் படத்தின் கதையை கேட்டுவிட்டு அந்த ரோலில் நடிக்கவில்லை.

அதன் பிறகு உடனடியாக நடிகை மீனா உடன் இந்த கதையை கூறி உள்ளார் அவரும் உடனே மறுக்க அதன் பிறகு இந்த கதாபாத்திரம் சிம்ரனுக்கு போனது அதை அவர் திறம்பட ஏற்று நடித்து அசத்தினார்.

அதேபோல நடிகை ஜோதிகா ரோல் முதன்முதலில் மீனாவுக்கு தான் சென்றது அதையும் அவர் மறுத்தார் என்பது குறிப்பிடதக்கது அதன் பிறகு தமிழ் சினிமாவில் மீனாவின் சினிமா எதிர்காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய இந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்தால் இன்னும் பல படங்களில் நடிப்பதோடு டாப் நடிகர் படங்களையும் கைப்பற்றி  நடித்துஇருப்பார் என கூறப்படுகிறது

வாலி படத்தில் நடித்த அனைவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்சத்தை தொட்டு தான் இருக்கின்றனர் அதுபோல மீனாவும் இருந்திருப்பார் ஆனால் அதை அப்போது அவர் அதை நிராகரித்தது அவரது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் ஆகியது.

Leave a Comment