படுகாயமடைந்த நடிகை யாஷிகாவுக்கு.. அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்கள்.? சினிமாவில் சரிவை சந்திக்கிறாரா.? பரவும் செய்தி.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் யாஷிகா ஆனந்த். சமிப காலமாக இவர் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.

அந்த வகையில் சமீபத்தில் தனது தோழி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்து கொண்டு பின்  சென்னையில் உள்ள வீட்டை நோக்கி பயணித்தார்.

யாஷிகா ஆனந்த் பயணித்த கார் மால்லபுரம் அருகே விபத்து ஒன்றில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே யாஷிகா ஆனந்த் தோழி பள்ளி செட்டி பவானி உயிரிழந்தார் மேலும் விபத்தில் யாஷிகா உட்பட இரண்டு ஆண் நண்பர்களும் அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை யாஷிகாவுக்கு தற்பொழுது பல்வேறு விதமான ஆபரேஷன்கள் செய்யப்பட்டு வருவதோடு அவர் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு வருடங்கள் ஆகலாம் என  டாக்டர்கள் தெரிவித்துள்ளதால் ரசிகர்களையும் தாண்டி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் படத்தில் நடித்து வருவதால் தயாரிப்பாளர் பலரும் அவர் மிண்டு  வரும் வரைக்கும் பொருத்து இருந்தால் கடன் சுமை அதிகமாகிவிடும் என்பதால் யாஷிகா செல்லத்தை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகை கமீட் செய்ய முடிவு எடுத்து உள்ளது.

ஏற்கனவே இவர் இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது யாஷிகா ஆனந்த்தை கழிட்டி விட்டு வேறு ஒரு நடிகையை கமிட் செய்ய ஒரு சில பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முடிவு செய்துள்ளதால் அவரது பட வாய்ப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

Leave a Comment

Exit mobile version