காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது ஒருவரையா.? நடிகை அஞ்சலிக்கு விரைவில் டும்டும்டும்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது பிரபல தொழிலதிபறை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அஞ்சலி. இவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் திரும்பி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தற்போது அஞ்சலி அவர்கள் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு இவருடைய திருமணம் நடக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் அஞ்சலிக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற தகவல் செம்ம வைரலாகி பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய் காதலிப்பதாக பல முறை அஞ்சலி கிசுகிசுக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்லாமல் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியானது.

இது குறித்து நடிகை அஞ்சலியிடம் கோட்டபோது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். ஆனால் இவர்கள் இருவரும் காதலித்ததாக வந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என பல ஊடகங்களில் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகர் ஜெய்யால் தான் நடிகை அஞ்சலியின் சினிமா மார்க்கெட் குறைந்ததாக கூறப்பட்டது.

ஜெய்யை தொடர்ந்து அதன் பிறகு பிரபல இயக்குனர் ஒருவரை நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலும் உண்மை இல்லை என்று அஞ்சலி கோபத்துடன் கூறினார். இந்த நிலையில் தற்போது திருமண பேச்சு ஒன்று கிளம்பி வைரலாகி வருகிறது.

ஆனால் இது குறித்து நடிகை அஞ்சலி எந்த ஒரு பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்து இதனால் இவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்றும் ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை அஞ்சலிக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து முடித்து விட்டார்களாம் விரைவில் அஞ்சலிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment