இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் டிக் டாக் இலக்கியா.

டிக் டாக் மியூசிக்கலி டப்ஸ்மாஷ் போன்ற ஆப்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி திரைப்படங்களில் நடிக்க பல நபர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே தங்களுக்கு என்ன தெரியுமோ சமைப்பது,  பாடுவது, ஆடுவது, நடிப்பது ஆடை அலங்காரம் செய்து கொள்வது போன்றவற்றை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை பெற்று வந்தனர்.

அவ்வகையில் டிக்டாக்கில் பிரபலமானவர் இலக்கியா. இவர் ஆரம்ப காலங்களில் நடிப்பு மற்றும் நடன வீடியோக்கள் பதிவிட்டு வந்தார் பின்பு சினிமா துறையில் அடியெடுத்து வைப்பதற்கு திறமையை வெளிப்படுத்துவதை விட அறைகுறையாக ஆடையணிந்து வருவதே சிறந்த வழி என்று தவறாக புரிந்து கொண்டு வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்தார்.

இவர் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து அந்த பாடலுக்கு கவர்ச்சியாக நடித்து வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி இவரை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்தி கசிந்தது.

அந்த வகையில் இவர் தற்போது அறிமுக இயக்குனரான அலெக்சாண்டர் இயக்க உள்ள நீ போடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் டிக் டாக் புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா, பிரியா போன்ற பலர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படம் அடல்ட் காமெடி படமாகும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment