3 முதல் 4 மணிநேர பட பிடிப்பிற்கே 15 லட்சத்தை இஷ்டத்துக்கு செலவு செய்த மிஷ்கின்.! வண்டவாளத்தை வெளியே கூறிய விஷால்.! வெடித்தது துப்பறிவாளன் 2 பிரச்சனை

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள், இந்த திரைப்படத்தை விஷாலே தயாரித்து நடித்து வருகிறார், படத்தை முதலில் மிஷ்கின் தான் இயக்கி வந்தார்..

இந்த திரைப் படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, கௌதமி, ரகுமான், ஆஷ்யா ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள், இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் திடீரென இந்த திரைப்படத்திலிருந்து படத்தை இயக்கும் மிஷ்கின் நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மீதமுள்ள திரைப்படத்தை விஷாளே இயக்கி, நடித்தும், தயாரித்தும் வருகிறார், இதை விஷால் சமீபத்தில் அறிக்கையில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மிஷ்கின் படத்தை விட்டு விலகியதற்கு விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “ஒரு இயக்குனர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன.?

vishal
vishal

கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர் தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து அதற்கு மேலாக பயணம் தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து சரியான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி தயாரிப்பாளர் பணத்தை 13 கோடி ரூபாய் செலவழித்த பின்னர் படத்தை விட்டு ஒரு இயக்குனர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்தில் இருந்து விலகுவது ஏன்? ஒரு தயாரிப்பாளராக எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை, படத்தின் தயாரிப்பின் போது ஒரு இயக்குனர் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக் காட்டினால் அது தவறா? யூகே வில் 3 முதல் 4 மணி நேரம் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிட்ட போது படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் சூட் செய்வதற்கு பதில் செலவை குறைக்க இரவுபகலாக சூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை
நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கை விடுவது போல மோசமாக இருக்கிறது. இப்படியான தவறான செயல்களுக்கு பிறகு இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகும் டிசம்பர் 11 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல் ஜனவரி 4 2009 அன்று இந்தியாவிற்கு திரும்பி 2020 பிப்ரவரி முதல்வாரத்தில் விஎஃப்எஃப் அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குனருக்கு சரியானதா.?

திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும் தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குனர் அறிந்திருக்கிறார்? நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால் புதுமுக தயாரிப்பாளரோ அறிமுக தயாரிப்பாளரோ எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் சூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையும் அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நாம் படும் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்”. என தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

Leave a Comment