14 வயதிலேயே ஹீரோயினாக நடித்த துளசி நாயர் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! பார்த்தால் தூக்கி வாரி போடும்.

தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர்  நடிகை ராதா.

இவரின் மகள் தான் துளசி நாயர். துளசி நாயர் 2013ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

நடிகை ராதாவுக்கு இரண்டு மகள் உள்ளார்கள் ஒருவர் துளசி நாயர் மற்றொருவர் கார்த்திகா நாயர். இவருடைய இரண்டாவது மகள் கார்த்திகா ஜீவா நடிப்பில் வெளிவந்த யான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவ்வாறு பிரபலமடைந்த ராதாவின் இரண்டு மகள்களும் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க வில்லை.

இந்நிலையில் துளசி நாயரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மிகவும் குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடல் திரைப்படத்தில் நடித்த ஹீரோயினா இது நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

thualasi-nair (2)
thualasi-nair (3)

Leave a Comment

Exit mobile version