மருத்துவ வேலையை தூக்கி எறிந்து விட்டு நடிப்பு..! முப்பதே நாளில் மகனை இழந்த பிரபல சீரியல் நடிகை..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிடித்த சீரியல் ஆக அமைந்தது நாதஸ்வரம் சீரியல் தான் இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் அவர்கள் இயக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர்தான் இந்த சீரியலில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியல் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது. இவ்வாறு இந்த தொடரில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை தான் ரேவதி தாமோதரன்.

இவர் இந்த சீரியலுக்கு பிறகு கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை திருமணமாகி குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் ஆனால் குழந்தைகளுக்காக தற்போது சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நமது நடிகை பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் நான் மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் ஒரு நர்சாக பணியாற்றி வந்தேன் அப்பொழுது என்னை ஒரு விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள் இதனை தொடர்ந்து என்னை பல்வேறு ஷார்ட் பிலிம் களிலும் நடிக்க வாய்ப்புகள் வழி வகுத்து கொடுத்தது.

இதனை தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் அதிரடியாக கிடைத்த நிலையில் ஆடிஷனில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன் அந்த வகையில் எனக்கு சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் எங்கள் வீட்டில் என்னை நடிக்க போறேன் என்று சொன்னதும் திட்டியது மட்டும் இல்லாமல் என்னுடைய அம்மா அக்கா மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார்

nadhaswaram-1
nadhaswaram-1

பின்னர் ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமது நடிகை இரண்டு ஆண் குழந்தைக்கு தாயானர். சிசேரியன் மூலமாக குழந்தை பெற்ற நமது நடிகை முப்பது நாள் கழித்து வீடு திரும்பினார். மருத்துவமனைக்கு சென்றோம் 24 மணி நேரத்தில்  என்ன நடந்தது என்று தெரியவில்லை என் மகன் இறந்து விட்டான் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இது நாள் வரைக்கும் அவன் இல்லை என்கிற எண்ணம் எனக்கு தோணவில்லை அவன் என்னுடன் தான் இருக்கிறான் என்று அவரே கூறியுள்ளார்.

Leave a Comment