பாகிஸ்தான் அணிக்கு நாளை அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கும் மூன்று முத்தான இந்திய வீரர்கள்..!

ஆசிய கோப்பையை தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கிறது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் எப்பொழுதுமே பரம எதிரிகள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை மோத இருக்கின்றனர் ஆம் இவர்கள் இருவரும் நாளை மெல்போன் மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டியில் மோத இருகின்றனர்.

இந்திய அணி தற்போது ரெடியாக இருக்கிறது அதேபோல பாகிஸ்தான் அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு விளையாட ரெடியாக இருக்கிறது இந்திய அணி நாளை பாகிஸ்தான அணியை வீழ்த்த பல யூகங்களை வகுத்திருக்கிறது. ரோகித் சர்மா தெளிவான திட்டத்துடன் இறங்குவார் என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆடர்களையே குறி வைக்கும் ஆனால் இந்திய அணியின் கோச் பாகிஸ்தான் அணிக்கு தலைவலி கொடுக்க ஒரு வித்தியாசமான முடிவை எடுத்து உள்ளார் அதாவது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர்கள் விக்கெட்டை பறிபோனாலும்..

மிடில் ஆர்டரில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய சூரியகுமார் யாதவ் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையுமே பெரிதாக நம்பி  இருக்கிறாராம். இந்த மூவரில் யாரேனும் ஒருவர் நின்று அடித்து ஆடிவிட்டால் நிச்சயம் இந்தியா வெற்றி பெறுவது உறுதி..

மேலும் இந்த மூவரும் தான் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய குடைச்சல் கொடுக்க இருப்பதாக தெரிய வருகிறது. குறிப்பாக சூரியகுமார் யாதவ் செம்ம பார்மில் இருக்கிறார் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் பாகிஸ்தானுக்கு எதிராக அவரது ஆட்டம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்களும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.  நாளை இந்திய நேரப்படி 1:30 மணிக்கு  போட்டி ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment