கொடூர வில்லனாக மிரட்டிய பொன்னம்பலம் தற்கொலைக்கு முயற்சி..! எதற்காக தெரியுமா.?

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக ஒரு மிரட்டு மிரட்டியவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் மிரட்டிய நாட்டாமை, முத்து, அமர்க்களம் ஆகிய படங்கள் இவரது நடிப்பை உணர்த்தும் முக்கிய திரைப்படங்களாகும். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகர் பொன்னம்பலம். அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருப்பார்.

அதன் பிறகு பட வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு குறுகிய காலத்திலேயே வெளியேறினார். அதன் பிறகும் கூட அவருக்கு பட வாய்ப்பு எதுவும்  கிடைக்கவில்லை. இதன் காரணமாக நடிகர் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் அவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு  காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சைக்கு அதிக பணம் தேவை என்பதால் அதற்கு உதவுமாறு முன்னணி நடிகர்களிடம் உதவியும் கேட்டுள்ளார் நடிகர் பொன்னம்பலம். அவருக்கு நடிகர் சரத்குமார் மற்றும் தனுஷ் ஆகியோர் அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.

இந்நிலை நடிகர் பொன்னம்பலம் ஒரு பேட்டியில் நான் 20 முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன் என்று கூறியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக பேசிய நடிகர் பொன்னம்பலம் சினிமாவில் இருந்து சம்பாதித்த காசை எல்லாம் என்னுடைய மருத்துவ செலவிற்கு சரியாகிவிட்டது பின்னர் மருந்து வாங்க கூட என்னிடம் காசு இல்லாததால் விரக்தியில் 20-க்கு மேற்பட்ட தடவை நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற என்னத்திற்கு வந்து விட்டேன். அதன் பிறகு தான் முன்னணி நடிகர்களிடம் உதவி கேட்டேன் என்று கூறியுள்ளார். இவர் கூறிய தகவல் சினிமா வட்டாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment