இந்த முறை அது நடக்கும், நம்பிக்கையோடு இருக்கும் ரஜினி.! தரமாக உருவாகும் ஜெய்லர்…

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மதியம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாக நடிகர் ரஜினியின் திரைப்படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றித் திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி அவர்கள் விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் ஒரு வதந்தி கிளம்பியது ஆனால் நெல்சன் மீது தன்னை முழுமையாக ஒப்படைத்து தற்போது நடித்து வருகிறார் நடிகர் ரஜினி.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, உள்ளிட்டோர் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக மோகன்லால், சிவராஜ்குமார் என தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை களம் இறக்கியுள்ளார் நெல்சன் திலிப் குமார்.

இதனால் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் இதுவரைக்கும் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறார் அந்த காட்சிகளை பார்த்தவுடன் முழு திருப்தியுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த தகவலை ரஜினி தன் நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ரஜினிக்கு ஒரு சரித்திரமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு 4 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறபடுகிறது.

Leave a Comment