T20 உலக கோப்பையை இந்த அணி தான் கைபற்றும் – முன்னாள் இந்திய வீரர் கணிப்பு.! ஷாக்காக்கும் இந்திய ரசிகர்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பல நாடு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் ஒரு வழியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி  இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து உலக இருபது20 தொடர் இந்தியாவில் நடத்தப்பட்ட இருந்தது ஆனால் தற்போது நிலவும் சூழலில் சரி இல்லாததால் இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரை யார் வெல்வார் என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் தனது கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆனால் சபா கரீம் இந்த 2020 உலக கோப்பை தொடரை வெல்லும் அணி இதுதான் என தனது கருத்தை கூறி உள்ளார்.

எல்லா அணிகளுமே சிறந்த வீரர்களை தன்வசப்படுத்தி உள்ளது ஆனால் என்னை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான் இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார் ஏனென்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி களைவிட வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக மேட்ச் வின்னர் பிளேயர்கள் வைத்துள்ளனர்.

ஒவ்வொருவரும் சூழலுக்கு ஏற்றவாறு சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பரப்பப்படும் திறன் கொண்டவர்களாக இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களால் வெற்றியை நெருங்க முடியும் என தெரிவித்துள்ளார் மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை கரன் போராடு என்ற மூத்த வீரர் வழி நடத்தி செல்வது அந்த அணிக்கு பலம்.

மேலும் கெயில், பிராவோ போன்ற வீரர்கள் அவருடன் நிற்பதால் இந்த கோப்பை அவர்களுக்கோ சென்றடையும் என தெரிவித்தார் அவர்கள் இதை வெற்றி பெறவில்லை என்றால் அடுத்ததாக இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment