இந்தக் காட்சி இப்படித்தான் எடுக்க வேண்டும்..! மணிரத்தினத்துக்கே பாடம் புகட்டிய மாதவன்..!

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக இறங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகன் தான் மாதவன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடித்த அலைபாயுதே திரைப்படத்தில் அவருடைய இன்ட்ரோ இன்று பார்த்தால் கூட அவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என நம் அனைவருக்குமே தெரியும்.

அந்த வகையில் மிகப் பெரிய அளவில் பட்ஜெட் இல்லாமல் சாதாரணமான ஒரு கதையை வைத்து வசூலை அல்லிய திரைப்படம் என்றால் அது அலைபாயுதே திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தல அஜித்தின் மனைவி ஷாலினி நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படமானது நாசரின் வாழ்க்கை கதையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் படபிடிப்பின் பொழுது பல நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது அப்பொழுது எவனோ ஒருவன் என்ற பாட்டு முடிந்தவுடன் மாதவன் மற்றும் ஷாலினி மீட் செய்யும் காட்சி படம் எடுக்கப்பட்டது.

மேலும் ரொம்ப நாள் கழித்து காதலியை பார்க்கும் பொழுது அதிக அளவு எமோஷனல் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார்கள் ஆனால் மாதவன்  மணிரத்தினத்திடம் நான் இத்தனை ஹெவியா பீலிங்சை கொடுத்தால் கிளைமாக்ஸ் பீல் கொடுத்து விடும் ஆகையால் அதையே கிளைமாக்ஸ் செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து மணிரத்தினம் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டாராம் இதனால் படப்பிடிப்பு தளம் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தது மட்டுமில்லாமல் அவை மாதவனை பெருமளவு பயப்படுத்தியது பின்னர் இரவு மணிரத்தினம் அவர்கள் மாதவனிடம் கம்மியாக எமோஷனல் கொடுப்பதுதான் நல்லது என கூறியிருந்தார். மேலும் நீங்கள் சொல்வது தான் சரி என மணிரத்தினம் மாதவனிடம் கூறியது பெருமளவு வைரலாகியுள்ளது.

alaipayuthey
alaipayuthey

Leave a Comment