நான் நடித்த காட்சிகளில் எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் காட்சிதான்.! பேட்டியில் தன்னை பற்றி கூறிய வைகைப்புயல் வடிவேலு.!

சிங்கத்தின் கால்கள் பழுதடைந்தாலும் அதன் சீற்றங்கள் குறைவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் வைகைப்புயல் வடிவேலு இவர் ஒருசில காரணங்கள் குறித்து பல வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாமல் இருக்கும் நிலைமை இவருக்கு வந்து விட்டது.இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு பல வருடங்கள் காத்திருந்து தற்பொழுது சினிமாவில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் நடிகர் வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் கூடிய சீக்கிரம் எடுக்கப்படும் என சமீபத்தில் தகவல் வைரலாகி வந்த நிலையில் நடிகர் வடிவேலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ரசிகர்களுக்கு கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அந்த பேட்டியில் நடிகர் வடிவேலுக்கு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்து வந்தார் அப்பொழுது நீங்களே உங்களது காமெடி காட்சியை பார்த்து எப்பொழுதாவது சிரித்தது உண்டா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் உடனே பதில் சொன்னார்.

ஆம் நான் நடித்ததில் எனக்கு பல காட்சிகள் மிகவும் பிடிக்கும் ஆனால் எனக்கு மிகவும் சிறந்த காட்சி பிடிக்கும் என்றால் அது போலி டாக்டராக வேஷம் போட்டது தான் ஆம் நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலி டாக்டராக வேஷம் அணிந்து விட்டு ஒரு கிளினிக் நடத்தி வருவார்.

vadivel
vadivel

அப்பொழுது அவரிடம் பல்லு பிடுங்க வரும் நபரிடம் ஒரு சொத்தை பல்லை பிடுங்கி விட்டதும் அந்த நபர் 100 ரூபாய் பணம் கொடுப்பார் அப்பொழுது சில்லறை இல்லை என்பதால் அந்த நபரை படுக்கவைத்த இன்னொரு பல்லையும் பிடுங்கி விடுவார்.எதற்காக எனது பல்லை பிடுங்கினாய் என்று கேட்பதற்கு நடிகர் வடிவேலு சில்லறை இல்லை என்பதால் உனது இன்னொரு பல்லைப் பிடுங்கி விட்டேன் என்று கூறிவிடுவார் இந்த காட்சியை தான் அவர் பலமுறை பார்த்து சிரிப்பாராம்.

Leave a Comment