“பரியேறும் பெருமாள்” படத்தில் வரும் இந்த காட்சி மாரி செல்வராஜ் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்திருக்கிறது – ரகசியத்தை உடைத்த மாரிமுத்து.!

கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கனவர் இடத்தை பிடித்துள்ளவர் மாரி செல்வராஜ் இவர் இதுவரை பரியேறும் பெருமாள், கர்ணன் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தற்பொழுது மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு, பகத் பாசில் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில் ஜி மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பரியேறும் பெருமாள் படம் குறித்து கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கினார் இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, விஜய், ஜி மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன் என பலர் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் முறையாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறும் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை எடுத்துரைக்கும் படமாக இருந்தது.

இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளை அள்ளிக் குவித்தது இந்த படம் குறித்து ஜீ மாரிமுத்து சில தகவல்கள் சொன்னது என்னவென்றால்.. அந்த காட்சியை எடுக்கும் பொழுது மட்டும் இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார் தூத்துக்குடி திருநெல்வேலிக்கு இடையில் கருங்குளம் என்ற ஊரில் தான் இந்த காட்சியை படமாக எடுக்கப்பட்டது அந்த காட்சியானது விடிய விடிய எடுக்கப்பட்டது இந்த காட்சியில் கதிர் தன்னுடைய காதலி வீட்டில் நடக்கும் விழாவிற்கு கலந்து கொள்ள பக்கத்து வீட்டாரிடம் சட்டையை வாங்கி போட்டு கொண்டு ஒரு பரிசுடன் வருவார்.

ஆனால் காதலி வீட்டில் இருப்பவர்கள் இவரை அடித்து அவமானப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்துவார்கள் அந்த காட்சி என்று எங்களிடம் முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குனர் ஆனால் அந்த காட்சி எடுக்கும் பொழுது அனைவரையுமே  இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டி கொண்டு கோபமாக இருந்தார். நானும் அவரிடம் சென்று என்ன ஆச்சு ஒரே கோபமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு மாரி செல்வராஜ் கூறியது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது அவர் கூறியது. சார் இந்த காட்சி என்னுடைய உண்மையான வாழ்க்கையிலேயே நடந்திருக்கிறது என்று கூறினார். அப்பொழுது நான் புரிந்து கொண்டேன் இவரும் இப்படத்தில் வரும் கதிரை போலவே காதலி வீட்டிற்கு சென்று அவமானப்பட்டு உள்ளார் என்று எனவே நானும் இந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நடித்தேன் என்று பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் ஜி மாரிமுத்து.

Leave a Comment