இந்தப் பொங்கல் அஜித் விஜய்க்கு மட்டும் இல்ல எனக்கும் தான்..! கெத்து காட்டும் நடிகர் சூர்யா..!

வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு தல அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களும் திரையில் ஒரே நேரத்தில் வெளியாவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவை சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் திரைப்படம் ஒன்றாக ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஆகும் ஆகையால் இரண்டு தரப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப் பரபரப்பான பேச்சு சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பது போல் சூர்யாவும் தங்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தான் நடிக்கும் 42 வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமில்லாமல் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் கட்டப்படை பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆனது சென்னை மற்றும் புதுச்சேரியில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் மீதமுள்ள படப்பிடிப்பை கோவாவில் சில நாட்கள் முடித்ததன் பிறகு ஆக அடுத்ததாக வெளிநாடுகளில் இந்த படப்பிடிப்பை துவங்கலாம் என பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி 10 மொழிகளில் உருவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது இதில் அரத்தர் வெண்காட்டார் முக்காட்டார் மண்டாங்கர்  திருமணத்தார் ஆகிய நான்கு கேரக்டர்களில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி அவர்கள் நடித்த வருகிறார்.

மிகப்பெரிய பொருட்சளவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் தயாரித்து வருகிறார்.

ajith vijay surya
ajith vijay surya

Leave a Comment