இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்.? உண்மையை உடைத்த அபிராமி.?

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் திடீரென கம் பேக் கொடுத்த நடிகைகளில் ஒருவர் தான் அபிராமி இவர் சினிமாவில் கதாநாயகியாக புகழ்பெற்று விளங்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என சிறுவயதில் இருந்து இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் உடன் இணைந்து விருமாண்டி திரைப்படத்தில் நடித்த பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தார். இந்த திரைப்படத்தில் அவர் காளை வளர்க்கும் காட்சி அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது.

மேலும் விருமாண்டி திரைப்படத்தை தொடர்ந்து இவரை அதிகமாக திரையில் காண முடியவில்லை என்றே கூறலாம்.பத்து வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இவர் இருந்ததற்கு என்ன காரணம் என்பதை பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறதாம்.பத்து வருடங்கள் சினிமாவில் இருந்து விலகிய பொழுது இவர் மிகவும் சந்தோஷமாக இருந்தாராம் தான் 15 வயதில் நடிக்க வந்தேன் பள்ளி படிப்பை கூட ஒழுங்கா முடிக்கவில்லை.

என்றும் 21 வயது வரை இவர் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தார் என்பதை நினைத்து பார்த்து இவர் சினிமா பக்கமே 10 வருடங்களாக நடிக்க வரவில்லையாம். அந்த இடைப்பட்ட காலங்களில் இவர் தனது இல்ல வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாராம்.

தற்பொழுது இவர் மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களது இல்ல வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக இருந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

abirami
abirami

Leave a Comment