வாய்ப்பு தேடும் பொழுது பல இயக்குனர்கள் என்னிடம் இதைதான் எதிர்பார்த்தார்கள்..! உண்மையை உடைத்த யாஷிகா..!

சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமான நமது நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு எளிதில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

பின்னர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படமானது மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாகும்.

மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் அதிகமாக இடம் பெற்றதன் காரணமாக நமது நடிகையைப் பலரும் கவர்ச்சி  கன்னி என்றும் கவர்ச்சி கதாநாயகி என்றும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் எனக்கு நடித்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

இதனை தொடர்ந்து திரையுலகில் பிஸியாக நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்து ஒன்று ஏற்பட்டதன் காரணமாக தன்னுடைய கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாத அளவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்றில் பேசிய போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் வாய்ப்பு தேடும் பொழுது பல இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள இருந்தார்கள் என கூறியுள்ளார்

அதுமட்டுமில்லாமல் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளில் நடித்து காட்டுமாறு கூறி உள்ளார்கள்.

Leave a Comment