பார்த்திபனிடம் நான் எதிர்பார்த்தது இதுதான்.? விவகாரத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை

90 களில் வெற்றி நடிகையாக ஓடியவர் சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான “ஆண்பாவம்” என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வந்த சீதா ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் நடித்தும் பிரபலமானார்..

இப்படிப்பட்ட நடிகை சீதா பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் பிறந்தது, ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் 2010 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு நடிகை சீதா சின்னத்திரை பிரபலம் நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களும் சிறு காலத்திலேயே கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு தனியாக வாழ்ந்து வரும் சீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் கணவரான பார்த்திபன் குறித்து பேசி இருந்தார் அதில் அவர் கூறியது. தன்னுடைய மனைவி அதிகம் எதிர்பார்த்ததுதான் எங்களுடைய பிரிவு காரணம் என்று பார்த்திபன் கூறி இருந்ததாக நிரூபர் சீதாவிடம் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சீதா நான் சிறிய குடும்பத்தில் இருந்து வந்தவள்.. எனக்கு நடிகை சுஹாசினி ஒரு படத்தில் படுவதைப் போல என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்று நினைப்பவள் தன்னுடன் வாழும் கணவரிடம் இருந்து இந்த எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என கூறினார் மேலும் சீதா அவருடைய காதலை சொல்லும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ளும் மன நிலைமையில் தான் இருந்தேன்  என பார்த்திபன் கூறி இருந்தார்.

இதற்கு சீதா கூறியது.. நாங்கள் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்  தொடர்ந்து போன் செய்து அந்த மூன்று வார்த்தையை மட்டும் சொல் என்று கேட்பார். எனக்கும் அவரின் மீது காதல் இருந்ததனால் ஒரு நாள் ஐ லவ் யூ சொன்னேன் ஆனால் அதனை என்னுடைய அப்பா மற்றொரு போனில் கேட்டு பெரிய பிரச்சனையானது அப்படிதான் காதல் நிகழ்ந்ததை தவிர பார்த்திபன் சொல்வது போல இல்லை அவர் பொய் சொல்கிறார் என சீதா கூறினார்.

இந்த நிலையில் இருவரும் பிரிவதற்கான காரணம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது நடிகர் பார்த்திபன் சீதாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால், இந்த விஷயம் சீதாவிற்கு தெரிந்துள்ளது இதனால் தான் பார்த்திபனை சீதா விவாகரத்து செய்ததாக சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment