காதல் தோல்வி, தனிமை இரவு ஆகியவற்றில் இருந்து மீண்டுவர தனக்கு உதவியது இதுதான்.. சூப்பரான ஐடியாவை சொன்னார் சுருதிஹாசன்.

டாப் நடிகர்களின் படங்களை சமீப காலமாக கைப்பற்றி நடித்ததன் மூலம் தன்னை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை சுருதிஹாசன்

சினிமாவில் இவரது அப்பாமிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அதை பின்பற்றாமல் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தற்போது சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ருதி ஹாசன்

திடீரென காதல் வலையில் விழுந்ததால் சமீபகாலமாக திரையுலகம் பக்கம் காணாமல் போனார்.

சுருதிஹாசன் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அந்த நபர சுருதிஹாசனை கழட்டி விட்டார்.

மனமுடைந்து போன சுருதிஹாசன் வீட்டை விட்டு வெளியேறாமல் உடல் மெலிந்து போய் காணப்பட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என கேள்விகள் எழுப்பினர்.

அதிலிருந்து வெளிவர அவர் தெலுங்கு நடிகர் ஒருவரை காதல் செய்தார் அவரும் ஒரு கட்டத்தில் உதறிதள்ள பெரிதும் மன உளைச்சலில் சிக்கி தவித்தார் சுருதிஹாசன்.

அதிலிருந்து மீண்டு வர எதோ செய்து பார்த்தாலும் அவரால் வரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு விருப்பமான கவிதை எழுதுவதை இரவு/ பகலாக தொடர்ந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்ததாக கூறியுள்ளார்.

shruthi-2
shruthi-2

இரவு தனிமையில் நான் காதல் என்ற நினைப்பில் இருந்து வெளிவர கவிதையும், கதையும் எழுதியது  தனக்கு உதவியதாக குறிப்பிட்டார்.

Leave a Comment