பொண்ணுங்க குடிச்சா இதுதான் நடக்கும்.! ஆனா அத யாரு கேக்குறாங்க.. ஓபனாக பேசிய ஷகீலா.!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை சகிலா பல ஆண்டுகளாக இவர் ஒரு ஐட்டம் நடிகை என்றுதான் பலராலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்பொழுது இவர் பெயர் மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் ஆபாசமான படங்களில் நடித்து பிரபலமானார்.

இவ்வாறு தான் அனைவர் மனதிலும் இருந்து வந்தது பிறகு தற்பொழுது அம்மா என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் இதன் மூலம் தற்பொழுது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

மேலும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் ஏராளமான நடிகைகளை சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுத்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது அந்நிகழ்ச்சியில் இவர் கூறியதாவது ஒரு பெண் எதற்காக குடிக்க கூடாது என்று சொல்வார்கள் என இவரிடம் கேட்க அதற்கு பதில் அளித்த ஷகிலா ஒரு ஆண் குடித்துவிட்டு ஒரு இடத்தில் படுத்து இருக்கலாம் அடுத்த நாள் காலையில் கூட அதே இடத்தில் தான் இருப்பார்.

ஆனால் ஒரு பெண் அதே இடத்தில் குடித்துவிட்டு மயங்கி விழுந்தால் அந்த பெண் அந்த இடத்தில் இருப்பாளா அவளுடைய துணி கூட உடம்பில் இருக்காது இதனால் தான் பெரியவர்கள் பெண்கள் குடிக்க கூடாது என சொல்லுவார்கள் ஆனால் அதை யாரெல்லாம் கேட்கிறார்கள் எல்லோருமே குடித்துவிட்டு தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இவர் கூறியது போல ஆண்கள் அளவிற்கு பெண்கள் அனைவரும் இல்லை என்றாலும் பலரும் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு சகிலா ஓப்பனாக கூறியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் தொடர்ந்து பலருக்கும் அறிவுரை கூறியவர்.

Leave a Comment