விஜயின் இந்தப் படம் தான்..! என்னை சினிமா பக்கம் வரவைக்க தூண்டுகோலாக இருந்தது – அதர்வா பேட்டி.!

சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் அந்த நடிகர், நடிகைகள் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தினால் மட்டுமே சினிமாவுலகில் தாக்கு பிடிக்க முடியும் அதை சரியாக செய்து வருபவர் தான் நடிகர் அதர்வா.

இவர் முதலில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் அதர்வா தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என அப்பொழுது பலரும் கூறினர்.

அதை சரியான பாதையில் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இப்பொழுது வெளியாகி வெற்றி கண்டு வரும் படம் குருதி ஆட்டம் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடுகிறது. இந்த படம் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கிறது.

இந்த படத்தில் அதர்வாவுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார், வினோத், சாகர் கண்ணா ரவி மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடித்திருக்கின்றனர். படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அதர்வா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

சினிமா உலகில் முதலில் எனக்கு நடிக்கணும் என்ற எண்ணமே கிடையாது ஆனால் எனது தாத்தா அடிக்கடி நீ சினிமாவில் நடிக்கணும் என சொல்லுவார் அது தற்பொழுது நடந்து விட்டது. சின்ன வயதில் இருந்து நிறைய படம் பார்ப்பேன் இருப்பினும் விஜயின் சச்சின் படம் வெளிவந்த போது எனக்கு நடிக்கணும் என்ற ஆசை அப்பொழுது என் மனதிற்குள் வந்தது. மேலும் வாழ்க்கை பற்றியும் படம், பற்றியும் அவர் நிறைய பேசினார்.

Leave a Comment