என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான் – பதிலை சொல்லி அதிர வைத்த KGF பட இயக்குனர்.!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப் அதனைத் தொடர்ந்து உடனடியாக இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஷூட்டிங்கின்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இரண்டு வருடங்களாக படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிக்கொண்டே போனது.

ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 14 ம் தேதி உலக அளவில் கோலாகலமாக படம் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து இந்த படம் வெளியாகி இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை விட படம் சிறப்பாக இருந்ததால் தற்போது திரையரங்கில் ஹவுஸ்புல்லாக கே ஜி எஃப் 2  ஓடிக் கொண்டிருக்கிறது.

கன்னடம் மற்றும் அதை சுற்றி மற்ற இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அதிக திரையரங்குகளில் வெளியானது ஆனால்  தமிழகத்தில் மட்டும் குறைந்த திரையரங்குகளை கிடைத்தது. படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் பீஸ்ட் படத்தை பி கே ஜி எஃப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் காரணமாக பல்வேறு திரையரங்குகளில்  கேஜிஎஃப் படத்திற்கு முன்னுரிமையை கொடுக்கப் பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் கேஜிஎஃப் படத்தின் வசூல் தமிழகத்திலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மேலும் நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளதால் அதிக நாட்கள் ஓடும் எனவும் தெரிய வருகிறது.

இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் மாஸ் நிறைந்த காட்சிகளாக இருந்தன மேலும் சென்டிமென்ட் அதிரடி ஆக்சன் ஆகியவை இருந்ததால் படம் பார்ப்பதற்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்ததாக தகவல்கள் உலா வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் ஒன்றாக இப்படி ஒரு சிறப்பான கதையை எப்படி எழுதினீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் நான் படத்தின் கதையை குடித்துவிட்டு தான் எழுதுவேன். அடுத்த நாள் நிதானமாக இருக்கும் போது அதை படித்துப் பார்ப்பேன் அது எனக்கு பிடித்து இருந்தால் அதை  திரைக்கதை எழுதுவேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

Leave a Comment