யாஷிகாவை விட்டு விலகியதற்கு காரணம் இதுதான்.! உண்மையைக் கூறிய பிக்பாஸ் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா.  இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் தனது சிபாரிசால் பிக்பாஸ் சீசன் 5 வில் நிரூப்பை கலந்துகொள்ள வாய்ப்பை பெற்று தந்தார்.

நிரூப்பும் இந்நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களின் ஃபேமிலி வந்தார்கள் அந்த வகையில் நிருப்பிற்கு அவரின் அப்பா அதன் பிறகு யாஷிகா இருவரும் வந்தார்கள். அப்பொழுது யாஷிகாவை நிரூப் பாபா என்றும் லவ் யூ என்றும் கூறினார் எனவே இதனைப் பற்றிய பல வதந்திகள் வந்த நிலையில் தற்போது நீரும் இதனைப்பற்றி சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்தது உண்மைதான் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து எங்களுக்குள் செட்டாகாது என்று தெரியவந்தது அதன்பிறகு எந்த சண்டையும் போடாமலும் சமாதானமாக பேசி பிரிந்தோம். இவ்வாறு பேசி தான் பிரிந்தோம் இருந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்கள் காதலித்து பிரிந்து விட்டோம் என்பதற்காக நாங்கள் வெறுக்கவில்லை பேசிக்கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகவில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்று தந்தது யாஷிகா தான் என்னுடைய அனைத்து புகழ் இருக்கும் யாஷிகா மட்டும்தான் காரணம்.எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆனால் பெரிதாக நான் எதுவும் சாதிக்கவில்லை இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் என்னை அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.

கடந்த ஒரு வருடங்களாக விபத்தில் சிக்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த யாஷிகா முதன் முறையாக நிருப்பை பார்ப்பதற்காகத் தான் வந்துள்ளார்.நிரூப் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட  பிறகு யாஷிகா மற்றும் நிரூப் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் வெளிவந்த காரணத்தினால் ரசிகர்கள் அனைவரும் யாஷிகாவிடம் நிரூப் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் எக்ஸ் பாய்பிரண்ட் என்று கூறினார்.

Leave a Comment