விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக போனதற்கு காரணமே இதுதானாம்.? உண்மையை உடைத்த மீசை ராஜேந்திரன்.!

Vijayakanth : ஒரு காலகட்டத்தில் சினிமாவின் உச்சியில் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் இளம் வயதிலேயே இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது. அதனால் தான் வைத்திருந்த சொத்துக்களை வித்துவிட்டு சினிமாவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார்.

வாய்ப்பு தேடிப்போன இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த விஜயகாந்த் எட்டிப் பார்த்தன. படிப்படியாக முன்னேறி ஒரு கட்டத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரஜினி, கமல் போன்ற அவர்களையே ஆச்சரியப்பட வைத்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் தான் சந்தித்த நடிகர் நடிகர் மத்தியில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தார். மேலும்  அவர்களுக்கு உதவி செய்வது அவருடைய பிரச்சனையை தீர்த்து வைப்பது போன்ற தன்னால் முடிந்த காரியங்களை செய்து வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கறி சோறு போட்டு அசத்தினார்.

இதனாலேயே பலரும் இவரை கேப்டன் என அழைத்தனர். சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த விஜயகாந்த்  அரசியலில் என்ட்ரி கொடுத்தார் ஆரம்பத்திலிருந்து இவருடைய வளர்ச்சி அமோகமாக இருந்தது.  நல்லபடியாக பயணித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வு எடுத்த வருகிறார்கள்.

இவர் மீண்டும் வர வேண்டுமென அவருடைய ரசிகர்களும், கட்சி ஆட்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார் அவர் சொன்னது.. விஜயகாந்த் மிகவும் கடுமையான உழைப்பாளி வருடத்திற்கு 14 படங்கள் வரை நடித்துள்ளார்.

meesai rajendran
meesai rajendran

சரியான ஓய்வு இல்லாத காரணத்தினால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.. அதுமட்டுமின்றி விஜயகாந்த் அரசியலில் பல துரோகிகளை சந்தித்து இருக்கிறார் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் இது அனைத்துமே சேர்ந்து அவரது உடலை பாதித்துவிட்டது என கூறியுள்ளார்.

Leave a Comment