பல வருடங்களாக திரைப்படம் இயக்காமல் இருக்க இதுதான் காரணம்..! எஸ் ஜே சூர்யா ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் தோல்வியை துளிக்கூட சந்திக்காத இயக்குனராக வலம் வந்தவர் தான் எஸ் ஜே சூர்யா இவ்வாறு பிரபலமான இயக்குனர் சமீபத்தில் இயக்கத்தில் இருந்த ஆர்வத்தை விட நடிப்பில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு நடிகராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத ஒரே காரணத்தினால் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக வேண்டியதாயிற்று. ஆனால் இயக்குனராக இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு இருந்தது.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக வாலி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன்பிறகு தளபதி விஜயை வைத்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர் வெற்றியை கொடுத்த எஸ் ஜே சூர்யா அதன்பிறகு திரைப் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தாமல் திரைப் படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.இதற்கான காரணத்தை அவரே சமீபத்தில் கூறியுள்ளார்.

அதாவது நான் இயக்குனராக பல்வேறு வெற்றியையும் விருதுகளையும் வாங்கி விட்டேன் அந்த வகையில் நான் நடிகராகவும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் ஆகையால் எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை தற்போது இருப்பதன் காரணமாக தான் நான் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறேன்.

மேலும் நான் தளபதி விஜய்க்காக ஒரு கதை எழுதி வைத்துள்ளேன் என்னுடைய நடிப்பு ஆசை தீர்ந்த பிறகு இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக எஸ் ஜே சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

Leave a Comment