படங்களில் நடிக்க சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்.! தயாரிப்பாளர்களுக்கு லாபம்.. பிரபலம் பேட்டி

Serial Actress: சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஏராளமான நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு தயாரிப்பாளர்கள் சிலர் முன்னணி நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளை வைத்து படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காமிக்கின்றனர்.

எனவே இதனால் இவர்கள் சின்னத்திரை நடிகைகளை தங்களது படங்களில் ஏன் ஹீரோயினாக நடிக்க வைக்க விரும்புகின்றனர் என்பதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டிகள் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடைபெறும் உண்மை சம்பவங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய பேட்டி அளித்து வருபவர் தான் நடிகரும் சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து சித்ராதேவி, கௌதமை திட்டி தீர்க்கும் குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இவருடைய பேட்டி ஏராளமானவை ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டாலும் திரை பிரபலங்கள் பலரும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். தொடர்ந்து பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை பரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரை நடிகைகள் குறித்து கூறியுள்ளார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. எனவே இதனால் விரைவில் இவர்களுக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்ற நடிகைகள் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வருகின்றனர்.

சாப்பாட்டில் பல்லி கடந்ததால் அதிர்ச்சியான முத்து.. தப்பு செஞ்சது விஜயா.! திட்டு வாங்குறது மீனாவா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை வாணி போஜன் சின்னத்திரையின் சரோஜாதேவி என்று பலர் கூறினார்கள். பொதுவாக பெரிய நடிகைகளை படங்களில் நடிக்க வைக்கும் பொழுது ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்பார்கள். இதன் காரணமாக சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளை நடிக்க வைக்கும் பொழுது குறைவான சம்பளம் தான் தரப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும் இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு மாங்கா கிடைக்கும் என்பதால் சின்னத்திரை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அப்படித்தான் வாணி போஜனம் தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் கிடைத்து வண்டி நன்றாக ஓடிக் கொண்டிருப்பதனால் திருமணம் செய்து கொள்ளாததற்கும் காரணம் இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version