“மகான்” படத்தில் என்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் – வெளிப்படையாக உண்மையை சொன்ன வாணி போஜன்.! இதுக்கு ஷூட்டிங் போனது வேஸ்ட்..

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை வாணி போஜன். இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக நடித்து ஓடிக்கொண்டிருந்த வாணி போஜனின் திறமையை பார்த்து வாய்ப்புகளை கொட்டிக் கொடுத்தனர் அந்த வகையில் நடிகை வாணி போஜன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான “மகான்” திரைப்படத்திலும் கமிட்டானார்.

இந்த திரைப்படம் நிச்சயம் அவருக்கு நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என அவர் நம்பினார் அப்படித்தான் படத்தில் அவருக்கான கதையும் கொடுக்கப்பட்டது ஆனால் படம்  OTT தளத்தில் வெளிவந்து பார்க்கும் பொது வாணி போஜன்னுக்கு அங்கு சுத்தமாக கதாபாத்திரமே  இல்லாமல் இருந்தது சும்மா படத்தில் இவரது பெயருக்கு பக்கத்தில் நன்றி என போடப்பட்டிருந்தது தவிர  இந்தப் படத்தில் பார்க்க அவருக்கு எரோடே கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை வாணிபோஜன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அதில் அவர் கூறியது மகான் படத்தில் என்னுடைய கட்சிகள் நீக்கப்பட்டது குறித்து தீவிரமாக பேசி உள்ளார் விக்ரம் சாருடன் முதல்பாதி நடித்தேன் இரண்டாம் பாதி கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எங்களால் சூட்டிங் செல்ல முடியவில்லை இரண்டாவது பாதியில் தொடர்புடைய கதாபாத்திரம் இல்லாமல் இருந்தது மேலும் மகான் படத்தில் ஒன்பது நாள் சூட்டிங் இருந்தது.

அதில் நடித்தேன் ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து கேட்ட பொழுது எடிட் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் என சொன்னேன் எனக்கு ஒரு திரைப்படத்தில் நடித்த அனுபவம் தான் முக்கியம் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று கூறினேன் மேலும் இந்த படத்தில் விக்ரம் சாருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

ஆனால் என்னுடைய ரசிகர்கள் படத்தில் என்னை காணாமல் ஏமாந்து போனதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது மற்றபடி என்னுடைய காட்சிகள் நீக்கப்பட்ட தில் எனக்கு வருத்தமில்லை இதைப்பற்றி ஏற்கனவே இயக்குனர் என்னிடம் சொல்லி தான் இருந்தார் என கூறினார் வாணிபோஜன்.

Leave a Comment