சென்னை அணியில் மொயின் அலி தக்கவைக்க பட காரணம் இதுதான் – ஆச்சரியப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள்.

ஐபிஎல் தொடர் அடுத்த வருடமும் கோலாகலமாக மிகப்பெரிய அளவில் தொடங்கியிருக்கிறது மேலும் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாட இருப்பதால் பல்வேறு நிபந்தனைகள் அனைத்து அணிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான்.

அதற்கு இணங்க ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை தன்வசப்படுத்தி உள்ளது அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வீரர்களை தன் வசப்படுத்தியது முதலாவதாக ரவீந்திர ஜடேஜா அடுத்ததாக தோனி மொயின், அலி, ருத்ராஜ் ஆகியவர்களை தன் வசப்படுத்தியது.

அதிலும் குறிப்பாக மொயின் அலி எடுத்தது குறித்து சென்னை அணியின் மூத்த நிர்வாகி காசி விசுவநாதன் குறிப்பிட்டு பேசியுள்ளார். நாங்கள் சென்னை அணியில் அலியை தக்கவைக்க காரணமும் நாங்கள் அவரிடம் தொடர்ந்து பேசினோம் அப்போது அவர் சென்னை அணிக்கு விளையாட முழு மனதோடு இருப்பதாகவும் தன்னை முதல் வீரராக அல்லது கடைசி வீரராக எடுத்தால் பரவாயில்லை.

என்னை நீங்கள் எவ்வளவு தொகைக்கு கேட்டாலும் எனக்கு கவலை இல்லை சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை வேறு எந்த அணிக்கும் விளையாட விருப்பம் இல்லைதளரமாக சென்னை அணிக்காக விளையாட முன் வருவேன் என அவர் தெரிவித்ததை அடுத்து அவரை சென்னை அணி தக்க வைத்ததாக கூறப்படுகிறது

. இதனை அறிந்த ரசிகர்கள் பணத்தை விட சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் எனக் கூறி மொயின் அலி பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்

Leave a Comment