நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளாததற்கு காரணம் இதுதான்!! விக்னேஷ் சிவன் அறிவிப்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது உலகம் அறிந்ததே.

என்னதான் இதற்கு முன் நயன்தாரா, சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து இருந்தாலும் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் என பலமுறை சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தாலும் இவர்கள் இன்னும் திருமணம் பற்றி வாய் திறக்கவில்லை. மேலும் நயன்தாராவின் ஜோதிடர் ஒருவர் நயன்தாராவிற்கு இன்னும் சினிமா வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு ஏதோ தோஷம் உள்ளதாம்.

அதற்காக இவர்களை காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய அறிவுறுத்தி உள்ளார்களாம். லாக் டவுன் முடிந்ததும் கோவிலுக்கு சென்று வழிபட்டு பின்னரே திருமணம் பற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது.

Leave a Comment